என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாட்டறம்பள்ளியில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
Byமாலை மலர்28 Oct 2020 11:04 AM GMT (Updated: 28 Oct 2020 11:04 AM GMT)
நாட்டறம்பள்ளியில் 17 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
நாட்டறம்பள்ளி:
நாட்டறம்பள்ளியை அடுத்த எல்லப்பள்ளியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 20). இவருக்கும், அதேப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். அதன்படி நாட்டறம்பள்ளியில் உள்ள ஒரு கோவிலில் நேற்று முன்தினம் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதுபற்றி நாட்டறம்பள்ளி தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தாசில்தார் சுமதி மற்றும் வருவாய்த்துறையினர், குழந்தை பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் விரைந்து சென்று வெள்ளநாயக்கனேரி கிராமத்தில் விசாரித்தனர். அப்போது 17 வயது சிறுமிக்கு திருமணம் நடத்த இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 18 வயது பூர்த்தி அடைவதற்கு முன்பு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்று பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கி, திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X