search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்யபிரத சாகு
    X
    சத்யபிரத சாகு

    சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி விழிப்புணர்வு வினாடி வினா போட்டி - சத்யபிரத சாகு அறிவிப்பு

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இணையவழி வினாடி வினா போட்டி நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இணையவழி வினாடி வினா போட்டி நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வாக்காளர் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதற்கான அறிவூட்டல் (ஸ்வீப்) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பொது மக்களின் பங்கேற்பை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாநில அளவிலான இணையவழி வினாடி வினா போட்டி நடைபெற உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம். அனைத்து சுற்றுகளும் ‘கோல் குயிஸ் ஸ்போர்ட்ஸ்’ என்ற யூ டியூப் இணையதளத்திலேயே நடத்தப்படும்.

    முதல் நிலைப்போட்டி 3 சுற்றுகளை கொண்டது. முதல் சுற்று 25-ந்தேதி மாலை 4 மணிக்கும், 2-ம் சுற்று 26-ந்தேதி காலை 11 மணிக்கும், 3-ம் சுற்று அன்று மாலை 4 மணிக்கும் நடக்கும். இணையவழி தளத்திலேயே கருத்துகளை தெரிவிக்கும் (கமெண்ட் செக்சன்) பகுதியில் சரியான பதில்களை முதலில் பதிவிடும் நபரே அடுத்தடுத்த சுற்றுகளில் பங்கேற்க தகுதியானவர்.

    ஒரு நபர் ஒருமுறை மட்டுமே பதிலை பதிவிட வேண்டும். மொத்தம் 36 குழுக் கள் அரை இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அரை இறுதி மற்றும் இறுதி சுற்றுகள் பின்வரும் வார இறுதியில் நடத்தப்படும். இதுகுறித்த அறிவிப்பு போட்டியாளர்களுக்கு அறிவிக்கப்படும்.

    தேர்தல் மற்றும் பொது அறிவு (முறையே 50 சதவீதம்) சார்ந்து வினாடி வினா போட்டிகள் நடைபெறும். ஓர் அணி அதிகபட்சம் 2 நபர்களை கொண்டதாக இருக்க வேண்டும். அனுமதி இலவசம்.

    முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.25 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.15 ஆயிரமாகும். முதல் நிலை மற்றும் அரை இறுதி போட்டிகளில் சரியான பதில் அளிப்போருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×