search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 73 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை தினமும் 3,300 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    நேற்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதன் விவரம் தெரிவிக்கப்பட வில்லை. 14 ஆயிரத்து 690 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு முகாமில் 4 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 94 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் கட்டனார்பட்டியைச் சேர்ந்த 47 வயது பெண், 56 வயது நபர், ஆத்திப்பட்டி, ஆலங்குளம், ராஜபாளையத்தைச் சேர்ந்த 2 பேர், சாத்தூர், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த 2 பேர், மல்லங்கிணறு, பொம்மக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 73 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமைகளில் மிகக் குறைந்த அளவில் மருத்துவ பரிசோதனை செய்து வரும் நிலையில் அதனை பற்றிய விவரங்களையும் தெரிவிப்பதில்லை. தினசரி மருத்துவ பரிசோதனைகளின் எண்ணிக்கைகளையும், அதன் முடிவுகளையும் தாமதம் இன்றி தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×