search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நெல்லை அருகே மாணவி தீக்குளித்து பலி

    நெல்லை அருகே மாணவி தீக்குளித்து பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    பாளையங்கோட்டை சீவலப்பேரி அருகே உள்ள காட்டாம்புளி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகள் அபிநயா (வயது 17). பிளஸ்-2 மாணவியான இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அபிநயா சம்பவத்தன்று வீட்டில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய அவரை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அபிநயா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×