search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பல்லடத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    பல்லடத்தில், குடும்பத்தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி நல்லாகவுண்டம் பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மகள் கோமதி (வயது26) இவருக்கும் திருப்பூரைச் சேர்ந்த கார்த்தி என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது, இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரைப்பிரிந்து தனது தந்தை வீட்டில் கோமதி கடந்த 5 மாதமாக வசித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அனைவரும் உணவருந்திய பிறகு தூங்கச்சென்றனர். இந்த நிலையில் நேற்றுகாலை கோமதியை காணவில்லை, சமையல் அறை உள்பக்கமாக தாளிடப்பட்டு இருந்தது, ஜன்னல் வழியே பார்த்தபோது கோமதி வீட்டுக்கூரையின் கம்பியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்கிக்கொண்டிருந்தார்.

    இதையடுத்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர்ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கோமதியின் தம்பி ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான ஒரு வருடத்தில் இளம் பெண் தற்கொலை செய்துகொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×