என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பனியன் நிறுவன தொழிலாளியை கல்லால் தாக்கி கொல்ல முயற்சி- 2 பேர் கைது
Byமாலை மலர்14 Oct 2020 9:22 AM GMT (Updated: 14 Oct 2020 9:22 AM GMT)
திருப்பூரில் பனியன் நிறுவன தொழிலாளியை கல்லால் தாக்கி கொல்ல முயன்றது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் பாக்கிய அன்பரசன் (வயது 44). பனியன் நிறுவன தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பருதி (26) மற்றும் காலேஜ் ரோட்டில் வசித்து வரும் உசிலம்பட்டியை சேர்ந்த ஆனந்த் (30) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பாக்கிய அன்பரசன் வெங்கமேடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது இளம்பருதி, ஆனந்த் இருவரும் அங்கு சென்றுள்ளனர். அங்கு ஏற்கனவே அவர்களுக்குள் இருந்த முன்விரோதம் காரணமாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இளம்பருதி, ஆனந்த் ஆகியோர் சேர்ந்து பாக்கிய அன்பரசனை கல்லால் தலை மற்றும் முகத்தில் தாக்கி கொல்ல முயற்சி செய்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாக்கிய அன்பரசனின் மனைவி சாக்லன்மேரி அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியம்மாள் வழக்குப்பதிவு செய்து இளம்பருதி, ஆனந்த் இருவரையும் கைது செய்தனர். பின்னர் ஜே.எம்.3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.
திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் பாக்கிய அன்பரசன் (வயது 44). பனியன் நிறுவன தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பருதி (26) மற்றும் காலேஜ் ரோட்டில் வசித்து வரும் உசிலம்பட்டியை சேர்ந்த ஆனந்த் (30) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பாக்கிய அன்பரசன் வெங்கமேடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது இளம்பருதி, ஆனந்த் இருவரும் அங்கு சென்றுள்ளனர். அங்கு ஏற்கனவே அவர்களுக்குள் இருந்த முன்விரோதம் காரணமாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இளம்பருதி, ஆனந்த் ஆகியோர் சேர்ந்து பாக்கிய அன்பரசனை கல்லால் தலை மற்றும் முகத்தில் தாக்கி கொல்ல முயற்சி செய்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாக்கிய அன்பரசனின் மனைவி சாக்லன்மேரி அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியம்மாள் வழக்குப்பதிவு செய்து இளம்பருதி, ஆனந்த் இருவரையும் கைது செய்தனர். பின்னர் ஜே.எம்.3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X