என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாணியம்பாடியில் ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
Byமாலை மலர்30 Sep 2020 9:37 AM GMT (Updated: 30 Sep 2020 9:37 AM GMT)
வாணியம்பாடியில் ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி காதர்பேட்டை நியூடெல்லி பகுதியை சேர்ந்தவர் அன்னு என்ற அன்வர்பாஷா (50). இவர் தொடர்ந்து ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் மற்றும் ரேஷன் பொருட்களை ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி விற்பனை செய்து வந்தார்.
இந்த நிலையில் ரேஷன் அரிசி கடத்தியதாக அன்னு என்ற அன்வர்பாஷாவை கடந்த 6-ந் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்படி அன்னுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நேற்று கலெக்டர் சிவன்அருள் உத்தரவிட்டார். இதனையடுத்து வாணியம்பாடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையிலான போலீசார், அன்னுவை வாணியம்பாடி கிளை சிறைச்சாலையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X