search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வாணியம்பாடியில் ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது

    வாணியம்பாடியில் ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி காதர்பேட்டை நியூடெல்லி பகுதியை சேர்ந்தவர் அன்னு என்ற அன்வர்பாஷா (50). இவர் தொடர்ந்து ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் மற்றும் ரேஷன் பொருட்களை ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி விற்பனை செய்து வந்தார்.

    இந்த நிலையில் ரேஷன் அரிசி கடத்தியதாக அன்னு என்ற அன்வர்பாஷாவை கடந்த 6-ந் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    அதன்படி அன்னுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நேற்று கலெக்டர் சிவன்அருள் உத்தரவிட்டார். இதனையடுத்து வாணியம்பாடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையிலான போலீசார், அன்னுவை வாணியம்பாடி கிளை சிறைச்சாலையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×