என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்27 Sep 2020 12:33 PM GMT (Updated: 27 Sep 2020 12:33 PM GMT)
பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி திருவாரூர் அருகே ஆண்டிப்பாளையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:
2019-20 ஆண்டிற்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ.201 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மாவட்டத்தில் உள்ள 573 வருவாய் கிராமங்களில் 360 கிராமங்களுக்கு மட்டும் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. மீதமுள்ள 213 வருவாய் கிராமங்களுக்கு முற்றிலும் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. எனவே விடுபட்ட கிராமங்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கிட கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக திருவாரூர் ஒன்றியம் அடியக்கமங்கலம், கருப்பூர், அலிவலம் ஊராட்சிக்குட்பட்ட விவசாயிகளுக்கு 2018-19-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்படாததை கண்டித்தும்், உடனடியாக வழங்கக்கோரியும் திருவாரூர்் அருகே ஆண்டிப்பாளையத்தில்் அனைத்து விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். இதில் அனைத்து விவசாயிகள் கலந்துகொண்டு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X