search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உணவு பாதுகாப்பு சட்டத்தில் சேர்க்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

    உணவு பாதுகாப்பு சட்டத்தில் சேர்க்கக்கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் சார்பில், கள்ளிமந்தையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சத்திரப்பட்டி:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் சார்பில், கள்ளிமந்தையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பகத்சிங் தலைமை தாங்கினார். தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் காளீஸ்வரி முன்னிலை வகித்தார். 

    இதில், வக்கீல் பெருமாள், தொப்பம்பட்டி விவசாய சங்க முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ராமசாமி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு, மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை இணைக்க வேண்டும், மத்திய அரசின் வேளாண் மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். முடிவில் ஆயக்குடி கிளை செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.
    Next Story
    ×