search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நாமகிரிப்பேட்டையில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

    நாமகிரிப்பேட்டையில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாமகிரிப்பேட்டை:

    நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அரியாகவுன்டன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 39). விவசாயி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெகதீஸ்வரன் விஷம் குடித்து விட்டு வீட்டில் தூங்கி விட்டார். 

    பின்னர் நேற்று காலையில் அவரை குடும்பத்தினர் எழுப்பியபோது அவர் இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை போலீசார் அங்கு சென்று ஜெகதீஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×