search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குத்திரபாஞ்சான் அருவி
    X
    குத்திரபாஞ்சான் அருவி

    பணகுடி அருகே குத்திரபாஞ்சான் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது

    குத்திரபாஞ்சான் அருவியில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அரசுக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    பணகுடி:

    பணகுடி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குத்திரபாஞ்சான் அருவி பகுதியில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இந்த பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் இங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் இங்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகளை அருவியை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.

    எனவே குத்திரபாஞ்சான் அருவியில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அரசுக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    Next Story
    ×