என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குளச்சல் அருகே நடுக்கடலில் தத்தளித்த 11 மீனவர்கள் மீட்பு
Byமாலை மலர்23 Sep 2020 9:39 AM GMT (Updated: 23 Sep 2020 9:39 AM GMT)
குளச்சல் அருகே நடுக்கடலில் தத்தளித்த 11 மீனவர்களை தூத்துக்குடி கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.
தூத்துக்குடி:
குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த 11 மீனவர்கள் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் சுமார் 27 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது திடீரென படகு என்ஜின் பழுதடைந்தது. இதனால் மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி கடலோர காவல்படையினர் ரோந்து கப்பல் ‘அபினவ்’ மற்றும் ‘டோர்னியர்’ விமானத்தில் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பலத்த காற்று மற்றும் மழை பெய்ததால் சுமார் 3 மணி நேரமாக போராடி கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 11 மீனவர்களையும் மீட்டனர். பின்னர் மீனவர்களை படகுடன் கரைக்கு அழைத்து வந்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த 11 மீனவர்கள் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் சுமார் 27 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது திடீரென படகு என்ஜின் பழுதடைந்தது. இதனால் மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி கடலோர காவல்படையினர் ரோந்து கப்பல் ‘அபினவ்’ மற்றும் ‘டோர்னியர்’ விமானத்தில் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பலத்த காற்று மற்றும் மழை பெய்ததால் சுமார் 3 மணி நேரமாக போராடி கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 11 மீனவர்களையும் மீட்டனர். பின்னர் மீனவர்களை படகுடன் கரைக்கு அழைத்து வந்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X