search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

    திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றவர்கள் நல அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    கரூர்:

    திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றவர்கள் நல அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு முன்னாள் சி.ஐ.டி.யூ. செயலாளர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 2015 நவம்பர் முதல் கடந்த ஆகஸ்டு முடிய 58 மாத அகவிலைபடி உயர்வும், நிலுவை தொகையும் உடனே வழங்க வேண்டும். ஏப்ரல் 2019 முதல் ஏப்ரல் 2020 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு, ஓய்வு கால பணப்பலன்களை வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் சுப்பிரமணியன், ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×