என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்
Byமாலை மலர்16 Sep 2020 9:36 AM GMT (Updated: 16 Sep 2020 9:36 AM GMT)
தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அச்சத்தில் பாதுகாப்பு கேட்டு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
திருவண்ணாமலை:
ஆரணியை அடுத்த கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் ஆரணியை அடுத்த காட்டேரி கிராமத்தை சேர்ந்த ரகுவும் காதலித்து வந்து உள்ளனர். இது குறித்து ஜெயலட்சுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததால் காதலுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதையடுத்து கடந்த 4-ந் தேதி ஜெயலட்சுமி அவரது காதலன் ரகுவுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
பின்னர் அவர்கள் சேத்துப்பட்டை அடுத்த ஆவணியாபுரத்தில் உள்ள நரசிம்ம பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் மன்னார்குடியில் உள்ள ரகுவின் நண்பர் வீட்டில் கடந்த 10 நாட்களாக தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் ஜெயலட்சுமியின் குடும்பத்தினர் ரகுவின் பெற்றோருக்கு பல்வேறு மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் ஜெயலட்சுமியையும், ரகுவையும் அவர்கள் மிரட்டி உள்ளனர். இதனால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அச்சத்தில் பாதுகாப்பு கேட்டு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அவர்கள் தஞ்சம் அடைந்தனர். மேலும் இது குறித்து மனுவும் அளித்தனர்.
ஆரணியை அடுத்த கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் ஆரணியை அடுத்த காட்டேரி கிராமத்தை சேர்ந்த ரகுவும் காதலித்து வந்து உள்ளனர். இது குறித்து ஜெயலட்சுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததால் காதலுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதையடுத்து கடந்த 4-ந் தேதி ஜெயலட்சுமி அவரது காதலன் ரகுவுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
பின்னர் அவர்கள் சேத்துப்பட்டை அடுத்த ஆவணியாபுரத்தில் உள்ள நரசிம்ம பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் மன்னார்குடியில் உள்ள ரகுவின் நண்பர் வீட்டில் கடந்த 10 நாட்களாக தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் ஜெயலட்சுமியின் குடும்பத்தினர் ரகுவின் பெற்றோருக்கு பல்வேறு மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் ஜெயலட்சுமியையும், ரகுவையும் அவர்கள் மிரட்டி உள்ளனர். இதனால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அச்சத்தில் பாதுகாப்பு கேட்டு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அவர்கள் தஞ்சம் அடைந்தனர். மேலும் இது குறித்து மனுவும் அளித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X