search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஊழியருக்கு கொரோனா: தாசில்தார் அலுவலகம் மூடல்

    நன்னிலம் அருகே தாசில்தார் அலுவலகத்தில் வேலைப் பார்த்த ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அந்த அலுவலகம் மூடப்பட்டது.
    நன்னிலம்:

    நன்னிலம் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியும் 2 அலுவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தாசில்தார் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து நன்னிலம் தாசில்தார் மணிமன்னன் கூறியதாவது:-

    அலுவலர்கள் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தாசில்தார் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் அலுவலக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
    Next Story
    ×