என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போளூர் அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் கைது
Byமாலை மலர்15 Sep 2020 11:52 AM GMT (Updated: 15 Sep 2020 11:52 AM GMT)
போளூர் அருகே சாராயம் விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:
போளூர் மாயன் தெருவில் வசிப்பவர் மணி. இவரது மனைவி ராணி (வயது 50), சாராயம் விற்பதாக போளூர் இன்ஸ்பெக்டர் அருண்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த ராணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்யப்பட்டது.
போளுரை அடுத்த செங்கனாவரம் பகுதியை சேர்ந்தவர் மொச்சகொட்டை என்ற ஏழுமலை. இவரது மனைவி சரஸ்வதி அவரது சொந்த ஊரான வடுகசாத்து கிராமத்தில் நேற்று பகலில் பாத்திரத்தில் வைத்து சாராய விற்பனை செய்து வந்துள்ளார். தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் வடுகசாத்து கிராமத்திற்கு சென்று சாராயம் விற்று வந்த சரஸ்வதியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சரஸ்வதியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X