என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராசிபுரம் அருகே கூடங்குளம் அனுமின் நிலைய தொழிலாளி திடீர் மரணம்
Byமாலை மலர்4 Sep 2020 8:27 AM GMT (Updated: 4 Sep 2020 8:27 AM GMT)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஓடும் பஸ்சிலேயே கூடங்குளம் அனுமின் நிலைய தொழிலாளி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம்:
பீகார் மாநிலம் பசுராய் பகுதியைச் சேர்ந்த ஹரிநாராயண யாதவ் மகள் துர்கானந்த் யாதவ் (23). இவரும் அதேபகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் விஜயானந்த் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அனுமின் நிலையத்தில் டுவே காண்டிராக்டில் தச்சு வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுடன் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் 2-ந் தேதி பஸ்சில் பீகார் புறப்பட்டுச் சென்றனர்.
அவர்கள் நேற்று ராசிபுரம் அருகேயுள்ள சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு அருகேயுள்ள கிழங்கு மில் எதிரில் டீ குடிப்பதற்காக பஸ்சை நிறுத்தி உள்ளனர். அப்போது பஸ்சில் இருந்த வித்யானந்த் யாதவை (43) எழுப்பி உள்ளனர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. இது பற்றி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்றது.
ஆம்புலன்சில் இருந்தவர்கள் அவரை பரிசோதித்து பார்த்தபோது வித்யானந்த் யாதவ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றி துர்கானந்த்யாதவ் ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரம்யா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த வித்யானந்த் யாதவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் பசுராய் பகுதியைச் சேர்ந்த ஹரிநாராயண யாதவ் மகள் துர்கானந்த் யாதவ் (23). இவரும் அதேபகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் விஜயானந்த் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அனுமின் நிலையத்தில் டுவே காண்டிராக்டில் தச்சு வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுடன் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் 2-ந் தேதி பஸ்சில் பீகார் புறப்பட்டுச் சென்றனர்.
அவர்கள் நேற்று ராசிபுரம் அருகேயுள்ள சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு அருகேயுள்ள கிழங்கு மில் எதிரில் டீ குடிப்பதற்காக பஸ்சை நிறுத்தி உள்ளனர். அப்போது பஸ்சில் இருந்த வித்யானந்த் யாதவை (43) எழுப்பி உள்ளனர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. இது பற்றி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்றது.
ஆம்புலன்சில் இருந்தவர்கள் அவரை பரிசோதித்து பார்த்தபோது வித்யானந்த் யாதவ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றி துர்கானந்த்யாதவ் ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரம்யா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த வித்யானந்த் யாதவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X