என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரவுடி துரைமுத்துவின் கூட்டாளிகளை கைது செய்யவேண்டும்- விஜயகாந்த் வலியுறுத்தல்
Byமாலை மலர்20 Aug 2020 2:34 AM GMT (Updated: 20 Aug 2020 2:34 AM GMT)
ரவுடி துரைமுத்துவின் கூட்டாளிகளை போலீசார் அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்யவேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி துரைமுத்துவை பிடிக்கச்சென்ற போது காவலர் சுப்பிரமணியன் மீது வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். மக்களை பாதுகாக்கும் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
காவலர் சுப்பிரமணியனை வெடிகுண்டு வீசி கொலை செய்த ரவுடி துரைமுத்து உயிரிழந்துவிட்டாலும், துரைமுத்துவின் கூட்டாளிகளையும் போலீசார் அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்யவேண்டும். வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலர் சுப்பிரமணியன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக் கும் ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற சம்பவங் கள் தமிழகத்தில் இனிமேல் நடைபெறாத வண்ணம் போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X