என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மானியதஅள்ளியில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்18 Aug 2020 8:09 AM GMT (Updated: 18 Aug 2020 8:09 AM GMT)
டாஸ்மாக் அனைத்து ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நல்லம்பள்ளியை அடுத்த மானியதஅள்ளி டாஸ்மாக் மதுக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நல்லம்பள்ளி:
டாஸ்மாக் அனைத்து ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நல்லம்பள்ளியை அடுத்த மானியதஅள்ளி டாஸ்மாக் மதுக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்டசெயலாளர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். சங்க மாநில துணை பொதுச்செயலாளர் சமநீதி, நிர்வாகிகள் மயில்முருகன், முனுசாமி, சுப்ரமணி, கோவிந்தசாமி, கோவிந்தன், கோவிந்தராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பணியின்போது இறந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும். பணி நேரத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி அதியமான்கோட்டையிலும் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X