என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
என்ஜினீயரிங் படிப்பில் சேர 1.60 லட்சம் பேர் விண்ணப்பம்- கடந்த ஆண்டை விட அதிகம்
Byமாலை மலர்17 Aug 2020 1:32 AM GMT (Updated: 17 Aug 2020 1:32 AM GMT)
என்ஜினீயரிங் படிப்பில் சேர 1 லட்சத்து 60 ஆயிரத்து 504 பேர் விண்ணப்பித்து இருந்தனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விண்ணப்பப்பதிவு அதிகரித்துள்ளது.
சென்னை:
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கியது. விண்ணப்பப்பதிவு தொடங்கிய முதல் வாரத்திலேயே ஏராளமான மாணவர்கள் போட்டிப்போட்டு விண்ணப்பித்தனர். அதன் பின்னர், சீரான இடைவெளியில் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து வந்தனர். கடந்த 11-ந் தேதி நிலவரப்படி, என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு 1½ லட்சத்தை தொட்டது.
நேற்று முன்தினம் நிலவரப்படி, 1 லட்சத்து 58 ஆயிரத்து 333 பேர் விண்ணப்பித்து இருந்ததாகவும், அதில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 118 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி இருந்ததாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், என்ஜினீயரிங் படிப்பில் சேர விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளான நேற்று சுமார் 2 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்ததாக கூறப்பட்டது.
அந்தவகையில் நேற்று மாலை நேர நிலவரப்படி, என்ஜினீயரிங் படிப்பில் சேர 1 லட்சத்து 60 ஆயிரத்து 504 பேர் விண்ணப்பித்து இருந்தனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விண்ணப்பப்பதிவு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பம் பதிவு செய்த மாணவ-மாணவிகளில் இதுவரை 90 ஆயிரத்து 272 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து இருக்கின்றனர். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வருகிற 20-ந் தேதி (வியாழக்கிழமை) கடைசிநாள் ஆகும்.
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கியது. விண்ணப்பப்பதிவு தொடங்கிய முதல் வாரத்திலேயே ஏராளமான மாணவர்கள் போட்டிப்போட்டு விண்ணப்பித்தனர். அதன் பின்னர், சீரான இடைவெளியில் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து வந்தனர். கடந்த 11-ந் தேதி நிலவரப்படி, என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு 1½ லட்சத்தை தொட்டது.
நேற்று முன்தினம் நிலவரப்படி, 1 லட்சத்து 58 ஆயிரத்து 333 பேர் விண்ணப்பித்து இருந்ததாகவும், அதில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 118 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி இருந்ததாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், என்ஜினீயரிங் படிப்பில் சேர விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளான நேற்று சுமார் 2 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்ததாக கூறப்பட்டது.
அந்தவகையில் நேற்று மாலை நேர நிலவரப்படி, என்ஜினீயரிங் படிப்பில் சேர 1 லட்சத்து 60 ஆயிரத்து 504 பேர் விண்ணப்பித்து இருந்தனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விண்ணப்பப்பதிவு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பம் பதிவு செய்த மாணவ-மாணவிகளில் இதுவரை 90 ஆயிரத்து 272 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து இருக்கின்றனர். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வருகிற 20-ந் தேதி (வியாழக்கிழமை) கடைசிநாள் ஆகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X