என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூர் அருகே விவசாயியை தாக்கிய 2 போலீசார் பணியிடை நீக்கம்
Byமாலை மலர்14 Aug 2020 6:36 AM GMT (Updated: 14 Aug 2020 6:36 AM GMT)
கரூர் அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்திய பாலவிடுதி போலீசார் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
கரூர்:
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில், இந்த மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, கடந்த 9-ந்தேதி கரூர் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இந்தநிலையில் தரகம்பட்டி அருகே உள்ள ஆலத்தூர் கடைவீதியில் பாலவிடுதி போலீஸ் ஏட்டு மணிகண்டன் (வயது 42), போலீஸ்காரர் பொன்ராஜ் (30) ஆகிய 2 பேரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஆலத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி பிச்சைமுத்து (50) என்பவர் இடையப்பட்டிக்கு சென்று விட்டு, ஆலத்தூருக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது போலீஸ்காரர்கள் 2 பேரும் சேர்ந்து பிச்சைமுத்துவை வழிமறித்து இப்பகுதியில் சந்துக்கடை எங்கு உள்ளது எனக்கூறி கேள்வி எழுப்பினர். இதற்கு பிச்சைமுத்து எனக்கு தெரியாது என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர்கள் பொன்ராஜ், மணிகண்டன் ஆகிய 2 பேரும் சேர்ந்து பிச்சைமுத்துவை தாக்கினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.
இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகவலன் விசாரணை நடத்தினார். பின்னர் விவசாயியை தாக்கிய போலீசார் பொன்ராஜ், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
சாத்தான்குளத்தில் தந்தை-மகனை தாக்கி கொலை செய்த வழக்கில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் கைது செய்யப்பட்டு சி.பி.ஐ. விசாரணை நடந்து வரும் இந்த நேரத்தில், கரூர் மாவட்ட போலீசார் விவசாயியை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில், இந்த மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, கடந்த 9-ந்தேதி கரூர் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இந்தநிலையில் தரகம்பட்டி அருகே உள்ள ஆலத்தூர் கடைவீதியில் பாலவிடுதி போலீஸ் ஏட்டு மணிகண்டன் (வயது 42), போலீஸ்காரர் பொன்ராஜ் (30) ஆகிய 2 பேரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஆலத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி பிச்சைமுத்து (50) என்பவர் இடையப்பட்டிக்கு சென்று விட்டு, ஆலத்தூருக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது போலீஸ்காரர்கள் 2 பேரும் சேர்ந்து பிச்சைமுத்துவை வழிமறித்து இப்பகுதியில் சந்துக்கடை எங்கு உள்ளது எனக்கூறி கேள்வி எழுப்பினர். இதற்கு பிச்சைமுத்து எனக்கு தெரியாது என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர்கள் பொன்ராஜ், மணிகண்டன் ஆகிய 2 பேரும் சேர்ந்து பிச்சைமுத்துவை தாக்கினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.
இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகவலன் விசாரணை நடத்தினார். பின்னர் விவசாயியை தாக்கிய போலீசார் பொன்ராஜ், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
சாத்தான்குளத்தில் தந்தை-மகனை தாக்கி கொலை செய்த வழக்கில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் கைது செய்யப்பட்டு சி.பி.ஐ. விசாரணை நடந்து வரும் இந்த நேரத்தில், கரூர் மாவட்ட போலீசார் விவசாயியை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X