என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 56 பேர் கைது
Byமாலை மலர்7 Aug 2020 1:44 PM GMT (Updated: 7 Aug 2020 1:44 PM GMT)
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாக 56 பேரை போலீசார் கைது செய்தனர். 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல்:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் தேவையின்றி சுற்றித்திரிபவர்களை கண்டறிந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஊரடங்கை மீறியதாக 56 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நேற்று வரை நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 12,498 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16,682 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 6,128 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 16 இடங்களில் வாகன சோதனை நடத்திய போலீசார் முககவசம் அணியாமல் வந்த 260 பேருக்கு அறிவுரைகள் வழங்கினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X