என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கச்சத்தீவு அருகே படகு பழுதானதால் தவிப்பு- மாயமான ராமேசுவரம் மீனவர்கள் பத்திரமாக மீட்பு
Byமாலை மலர்6 Aug 2020 8:13 AM GMT (Updated: 6 Aug 2020 8:13 AM GMT)
கச்சத்தீவு அருகே படகு பழுதானதால் தவித்த ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 4-ந் தேதி பாக்கியம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் பெஞ்சமின், முனிசாமி, திரவியம், செல்வராஜ், சாகுல் உள்பட 7 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் மறுநாள் கரை திரும்ப வேண்டும். ஆனால் படகுடன் 7 மீனவர்களும் மாயமாகினர்.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ரோந்து கப்பல் மூலம் மண்டபம் கடலோர காவல்படையினர் மீனவர்களை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் ராமேசுவரத்தில் இருந்து ஒரு படகில் மீனவர்கள் அடங்கிய மீட்புக் குழுவும் சென்று மீனவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் படகு பழுதாகி படகில் தத்தளித்துக்கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த அந்த 7 மீனவர்களையும் மீட்புக்குழு அடங்கிய மீனவர்கள் கண்டுபிடித்தனர். பிறகு தங்கள் படகில் அந்த படகை கயிறு மூலம் கட்டி நடுக்கடலில் இருந்து இழுத்து வந்து கொண்டிருந்தனர். வழக்கத்தைவிட பலத்த காற்று வீசியதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டதால் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையினர், அந்த 2 படகையும் பாதுகாப்பாக ராமேசுவரம் கரை வரை அழைத்து வந்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனால் அந்த 7 மீனவர்களின் குடும்பத்தினரும் நிம்மதி அடைந்தனர்.
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 4-ந் தேதி பாக்கியம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் பெஞ்சமின், முனிசாமி, திரவியம், செல்வராஜ், சாகுல் உள்பட 7 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் மறுநாள் கரை திரும்ப வேண்டும். ஆனால் படகுடன் 7 மீனவர்களும் மாயமாகினர்.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ரோந்து கப்பல் மூலம் மண்டபம் கடலோர காவல்படையினர் மீனவர்களை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் ராமேசுவரத்தில் இருந்து ஒரு படகில் மீனவர்கள் அடங்கிய மீட்புக் குழுவும் சென்று மீனவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் படகு பழுதாகி படகில் தத்தளித்துக்கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த அந்த 7 மீனவர்களையும் மீட்புக்குழு அடங்கிய மீனவர்கள் கண்டுபிடித்தனர். பிறகு தங்கள் படகில் அந்த படகை கயிறு மூலம் கட்டி நடுக்கடலில் இருந்து இழுத்து வந்து கொண்டிருந்தனர். வழக்கத்தைவிட பலத்த காற்று வீசியதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டதால் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையினர், அந்த 2 படகையும் பாதுகாப்பாக ராமேசுவரம் கரை வரை அழைத்து வந்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனால் அந்த 7 மீனவர்களின் குடும்பத்தினரும் நிம்மதி அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X