என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய அரசை கண்டித்து 8-ந் தேதி 200 இடங்களில் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்5 Aug 2020 10:52 AM GMT (Updated: 5 Aug 2020 10:52 AM GMT)
மத்திய அரசை கண்டித்து 8-ந் தேதி 200 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் நேற்றுகாலை திருப்பூர் பி.என்.ரோட்டில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி.ஜெனரல் சங்க பொதுச்செயலாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். சேகர்(ஏ.ஐ.டி.யு.சி.), உன்னிகிருஷ்ணன்(சி.ஐ.டி.யு.), சிதம்பரசாமி(எல்.பி.எப்.), சிவசாமி(ஐ.என்.டி.யு.சி.), முத்துசாமி(எச்.எம்.எஸ்.), சம்பத்(எம்.எல்.எப்) உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசின் தொழிலாளர் உரிமைகளை பறிக்கிற, மக்களின் வாழ்வாதாரங்களை நொறுக்குகிற, பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் விற்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும், இந்தியாவை பாதுகாப்போம் என்றும் கூறி நாடு முழுவதும் வருகிற 8-ந்தேதி போராட்டம் நடைபெற உள்ளது. இதில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் 200 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்களிடம் கையெழுத்து வாங்கி மனுக்களை ஜனாதிபதிக்கு அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X