search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்முடி எம்எல்ஏ
    X
    பொன்முடி எம்எல்ஏ

    புதிய கல்வி கொள்கைக்கு பணியாமல் மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் - பொன்முடி எம்எல்ஏ

    கிராமப்புற மாணவர்களை புறக்கணிக்கும் புதிய கல்வி கொள்கைக்கு பணிந்து போகாமல் மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பொன்முடி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
    விழுப்புரம்:

    மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கை, ஆன்லைன் வகுப்பு குறித்து விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., நேற்று ‘ஜூம் செயலி’ மூலம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதிய கல்வி கொள்கை மூலம் மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ். கொள்கையை புகுத்த முயல்கிறது. பா.ஜ.க. அரசு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே ரேஷன் கார்டு என்று பொதுமக்களுக்கு எதிராகவே உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கூட்டாட்சி தத்துவத்தை கைவிட்டு ஒற்றையாட்சி தத்துவத்தை நோக்கி செல்கிறது.

    இந்தியாவில் சிறந்த கல்வியை தமிழகம் கொடுத்து வருகிறது. 60 சதவீத கிராமப்புற மாணவர்களை புறக்கணிக்கும் விதமாக இக்கொள்கை உள்ளது. இரு மொழி கொள்கையில் இருந்து மும்மொழி கொள்கையை கொண்டு வர முயல்கிறது. இது இந்தி மொழியை திணிக்கும் திட்டமாகும். மாநில அரசுக்கு கல்வி உரிமையை வழங்கினால்தான் அப்பகுதி மக்களுக்கு எது தேவை என முடிவெடுக்க முடியும். இதன் மூலம் மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. 

    பாடம் நடத்த ஆசிரியர்கள் தேவையில்லை. தன்னார்வலர்கள் பாடம்நடத்துவார்கள் என்கிறார்கள். பெற்றோர் கல்வி என்கிறார்கள். அதற்கு என்ன பொருள் என விளங்கவில்லை. ஆன்லைன் மூலமும், தொலைக்காட்சியிலும் பாடம் நடத்துவது மாநில அரசின் இயலாமையை காட்டுகிறது.

    கல்விக்கொள்கை குறித்த தி.மு.க.வின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கவில்லை. கல்வித்துறையில் சர்வாதிகாரப் போக்கை மத்திய அரசு கடைபிடிக்கிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மாநில அரசு பணிந்து போகாமல், இந்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இந்திய உயர்கல்வி ஆணையம் தேவையற்றது. 

    அதேபோல தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை பல்கலைக்கழகத்துடன் இணைப்பது தேவையற்றது. வெளிநாட்டு பல்கலைக்கழகத்தை புகுத்துவதன் நோக்கம் என்ன? ஆன் லைன் கல்வி நடைமுறைக்கு ஏற்றதல்ல. இதில் நல்ல திட்டம் எதுவும் கிடையாது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் இருமொழி கொள்கையை மேலும் தொடர, தலைவர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பார்.

    கொரோனா காலத்தை பயன்படுத்தி மத்திய அரசு இத்திட்டத்தை புகுத்த முயற்சிக்கிறது. கல்லூரிகளில் தாய்மொழி கல்வியை கொண்டு  வந்தது தி.மு.க. அரசு. 5-ம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வி என்று வரையறை இருக்கக்கூடாது. 

    இந்த புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு அமல்படுத்த முயன்றால் 1965-ம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை போன்ற பெரிய போராட்டத்தை தி.மு.க. 

    நடத்தும். தி.பரங்கினி கிராமத்தை சேர்ந்த பழங்குடி மாணவி தனலட்சுமிக்கு சாதிச்சான்று பெற்றுத்தர தி.மு.க. முயற்சி மேற்கொள்ளும். மேலும் அம்மாணவி படிப்பிற்கான உதவிகளை செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×