search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெறிச்சோடிய
    X
    வெறிச்சோடிய

    ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலையில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது

    ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலையில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப் பட்டது.
    திருவண்ணாமலை:

    தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவும் பல கட்டுப்பாடு களுடன் அமலில் உள்ளது. இந்த நிலையில் இந்த மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளும் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப் படும் என அரசு அறிவித்தது.

    அதன்படி கடந்த 5-ந் தேதி முழு ஊரடங்கு கடைபிடிக்கப் பட்டது. 2-வது ஞாயிற்றுக் கிழமையான நேற்றும் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது.

    இதையொட்டி நேற்று முன்தினம் அத்தியவாசிய பொருட்கள் வாங்க மக்கள் கடைவீதிகளுக்கு வந்ததால் திருவண்ணாமலை நகரில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    நேற்று திருவண்ணாமலை நகரத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், டீக்கடைகள், சலூன்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டது. மொத்த காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட்டும் மூடப்பட்டது. பொதுமக்களும் வீடுகளுக்குள் ளேயே முடங்கினர்.

    வழக்கமாக விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமை களில் அசைவ பிரியர்கள் இறைச்சி வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள். நேற்று இறைச்சி கடைகளும் மூடப்பட்டதால் பெரும் பாலான வீடுகளில் சைவ உணவுகளே சமைக்கப் பட்டது. பெட்ரோல் நிலையங் களும் மூடப்பட்டது. மருந்து கடைகள், மருத்துவமனைகள் மட்டும் திறந்திருந்தது. ஒரு சில பால் பூத்கள் திறக்கப்பட்டு 10 மணிக்குள்ளேயே மூடப் பட்டது.

    திருவண்ணாமலை நகரின் முக்கிய பகுதியான அறிவொளி பூங்கா உள்பட பல்வேறு இடங்களில் உள்ள இணைப்பு சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்த ப்பட்டிருந்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பல இடங்களில் போலீசார் வீட்டை விட்டு வெளியே வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

    இந்த ஊரங்கு காரணமாக திருவண்ணாமலை நகரமே மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப் பட்டது.

    ஊரடங்கு உத்தரவை யொட்டி கண்ணமங்கலம் பகுதி புதிய சாலையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. மருந்துக் கடைகள், பால் அங்காடிகள் மட்டும் திறந்திருந்தது. மக்கள் அனைவரும் வீடுகளுக் குள்ளேயே முடங்கி உள்ள னர்.

    ஆரணி நகரில் காந்திரோடு, மார்க்கெட் ரோடு, மண்டிவீதி, பெரியகடை வீதி, அருணகிரிசத்திரம், சைதாப் பேட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்துக்கடைகள் மட்டுமே திறந்து இருந்தன.

    நகரில் வாகனங்களில் காரணமின்றி சுற்றி திரிந்தவர் களை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    கீழ்பென்னாத்தூரில் நேற்று பால், மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லை. ஊர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. டாஸ்மாக் கடைகள், பெட்ரோல் நிலையங்களும் மூடப்பட்டி ருந்தன.

    போளூரிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப் பட்டது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கினர். இதனால் நகர வீதிகள் வெறிச்சோடி காணப் பட்டது. போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    நேற்று சுபமுகூர்த்த நாள் என்பதால் பொருட்கள் வாங்க முடியாமல் பொது மக்கள் அவதிப்பட்டனர். கிராமங்களிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட னர்.
    Next Story
    ×