என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் வீட்டில் 650 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய பெண் கைது
Byமாலை மலர்11 July 2020 3:57 PM GMT (Updated: 11 July 2020 3:57 PM GMT)
திருச்சியில் வீட்டில் 650 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்
திருச்சி:
திருச்சி ஆழ்வார்தோப்பு காயிதே மில்லத் நகரில் ஒரு வீட்டில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனி தாசில்தார்(மேற்கு) ராஜேஷ்கண்ணா தலைமையிலான அதிகாரிகள் நேற்று பகல் அதிரடியாக அந்த வீட்டுக்குள் புகுந்து சோதனை நடத்தினார்கள். அங்கு மூட்டை, மூட்டையாக 650 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் ரேஷன் அரிசி பதுக்கியதாக அந்த வீட்டில் இருந்த தாஜூனிஷா(வயது 52) என்ற பெண் கைது செய்யப்பட்டார். மூட்டை, மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்த 650 கிலோ ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டல்களில் கூடுதல் விலைக்கு விற்பதற்காக இந்த ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது. இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சி ஆழ்வார்தோப்பு காயிதே மில்லத் நகரில் ஒரு வீட்டில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனி தாசில்தார்(மேற்கு) ராஜேஷ்கண்ணா தலைமையிலான அதிகாரிகள் நேற்று பகல் அதிரடியாக அந்த வீட்டுக்குள் புகுந்து சோதனை நடத்தினார்கள். அங்கு மூட்டை, மூட்டையாக 650 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் ரேஷன் அரிசி பதுக்கியதாக அந்த வீட்டில் இருந்த தாஜூனிஷா(வயது 52) என்ற பெண் கைது செய்யப்பட்டார். மூட்டை, மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்த 650 கிலோ ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டல்களில் கூடுதல் விலைக்கு விற்பதற்காக இந்த ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது. இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X