என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் திருடிய 5 பேர் கைது
Byமாலை மலர்11 July 2020 12:18 PM GMT (Updated: 11 July 2020 12:18 PM GMT)
திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தின் பூட்டை உடைத்து திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் பூங்கா நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 43). இவர் அப்பகுதியில் பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அவரது நிறுவனத்தின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அங்கிருந்த செல்போனையும், வெளியே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் திருடிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டதாக சென்னையை சேர்ந்த லோகநாதன் (23), சூர்யா (20), வளர்மதி (25), சந்தோஷ் (30) உள்பட 5 பேரை கைது செய்தனர். கைதான 5 பேரும் வேப்பம்பட்டை சேர்ந்த அரிதாஸ் (50) என்பவரிடம் கத்திமுனையில் 1 பவுன் மோதிரம், ரூ.18 ஆயிரமும், வெள்ளவேட்டில் பூவரசன் என்பவரை தாக்கி செல்போன் மற்றும் ரூ.2,500ஐயும் பறித்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X