search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தர்மபுரி, பாப்பாரப்பட்டியில் முககவசம் அணியாமல் சென்ற 156 பேருக்கு அபராதம்

    தர்மபுரி மற்றும் பாப்பாரப்பட்டியில் முககவசம் அணியாமல் சென்ற 156 பேருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
    பாப்பாரப்பட்டி:

    பாப்பாரப்பட்டியில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வாகன சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் தாசில்தார் சேதுலிங்கம், பேரூராட்சி செயல் அலுவலர் விஜயசங்கர், துணை தாசில்தார் சிவக்குமார் கிராம நிர்வாக அலுவலர் ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்ற 96 பேருக்கு தலா ரூ.100 வீதம் ரூ.9,600 அபராதம் விதித்தனர். 

    இந்த சோதனையின்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக முககவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சாலைகளில் வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோர், பொது இடங்களில் கூடுவோர் சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். 

    தர்மபுரி நகரில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் கடைவீதிகளில் தனி தாசில்தார் ராஜசேகரன் தலைமையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் இளங்கோவன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்ற 60 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விதிமுறையை மீறி அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற 4 ஆட்டோக்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
    Next Story
    ×