என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருங்கல்லில் உயிர்பெற்ற நாதஸ்வரம்- தென்காசி சிற்பக்கலைஞர் சாதனை
Byமாலை மலர்11 July 2020 5:40 AM GMT (Updated: 11 July 2020 5:40 AM GMT)
தென்காசியை சேர்ந்த சிற்பக்கலைஞர் கருங்கல்லில் நாதஸ்வரத்தை அழகாக உருவாக்கி இருக்கிறார்.
தென்காசி:
தென்காசி அணைக்கரை தெருவை சேர்ந்தவர் காந்தி. இவருடைய மகன் மாரியப்பன் (வயது 35). இவர் கல்லில் எழில்மிகு சிற்பங்கள் உருவாக்கும் கலைஞர் ஆவார். தென்காசி அருகே உள்ள வேட்டைக்காரன் குளம் பகுதியில் சிற்பக்கூடம் நடத்தி வருகிறார். அவருடன் தந்தை மற்றும் உறவினர்கள் 2 பேரும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் கோவில்களுக்கு சிற்பங்களை செய்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார்கள். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவில்களில் கும்பாபிஷேக பணிகள் நடத்த அனுமதி இல்லை. இதனால் அவர்கள் வேலை இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் தான் மாரியப்பனுக்கு தற்போதைய ஓய்வு நேரத்தில் புதிதாக ஏதாவது செய்யலாமே என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவு, கருங்கல்லில் நாதஸ்வரத்தை அழகாக உருவாக்கி இருக்கிறார். பின்னர் அவர் தனது நண்பரான தென்காசி மலையான் தெருவை சேர்ந்த நாதஸ்வர கலைஞர் ராமச்சந்திரனை அழைத்து, கருங்கல் நாதஸ்வரத்தை காண்பித்தார். அதை அவர் வாசித்தபோது, இனிய ஓசை வந்தது. அவர் ஆச்சரியம் அடைந்தார்.
தென்காசி அணைக்கரை தெருவை சேர்ந்தவர் காந்தி. இவருடைய மகன் மாரியப்பன் (வயது 35). இவர் கல்லில் எழில்மிகு சிற்பங்கள் உருவாக்கும் கலைஞர் ஆவார். தென்காசி அருகே உள்ள வேட்டைக்காரன் குளம் பகுதியில் சிற்பக்கூடம் நடத்தி வருகிறார். அவருடன் தந்தை மற்றும் உறவினர்கள் 2 பேரும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் கோவில்களுக்கு சிற்பங்களை செய்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார்கள். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவில்களில் கும்பாபிஷேக பணிகள் நடத்த அனுமதி இல்லை. இதனால் அவர்கள் வேலை இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் தான் மாரியப்பனுக்கு தற்போதைய ஓய்வு நேரத்தில் புதிதாக ஏதாவது செய்யலாமே என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவு, கருங்கல்லில் நாதஸ்வரத்தை அழகாக உருவாக்கி இருக்கிறார். பின்னர் அவர் தனது நண்பரான தென்காசி மலையான் தெருவை சேர்ந்த நாதஸ்வர கலைஞர் ராமச்சந்திரனை அழைத்து, கருங்கல் நாதஸ்வரத்தை காண்பித்தார். அதை அவர் வாசித்தபோது, இனிய ஓசை வந்தது. அவர் ஆச்சரியம் அடைந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X