என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த 850 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
Byமாலை மலர்10 July 2020 3:57 PM GMT (Updated: 10 July 2020 3:59 PM GMT)
வானூர் அருகே மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த 850 கிலோ ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக நேற்று காலை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் தனி தாசில்தார் உஷா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வானூர் அருகே தேற்குணம் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஜெயமூர்த்தி (வயது 48) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் தலா 50 கிலோ எடை கொண்ட 17 மூட்டைகளில் 850 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், ஜெயமூர்த்தி வானூர் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி அதனை தன்னுடைய மளிகை கடையில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, ஜெயமூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக நேற்று காலை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் தனி தாசில்தார் உஷா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வானூர் அருகே தேற்குணம் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஜெயமூர்த்தி (வயது 48) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் தலா 50 கிலோ எடை கொண்ட 17 மூட்டைகளில் 850 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், ஜெயமூர்த்தி வானூர் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி அதனை தன்னுடைய மளிகை கடையில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, ஜெயமூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X