என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாவட்டத்தில் 1½ வயது குழந்தை உள்பட மேலும் 6 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்6 Jun 2020 10:03 AM GMT (Updated: 6 Jun 2020 10:03 AM GMT)
கரூர் மாவட்டத்தில், 1½ வயது குழந்தை உள்பட மேலும் 6 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 88-ஆக உயர்ந்துள்ளது.
கரூர்:
கரூர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 42 பேர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். தொடர்ந்து, மராட்டியம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என மீண்டும் படிப்படியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 40 பேர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் ஒவ்வொருவராக மொத்தம் 38 பேர் குணமடைந்தனர். இந்தநிலையில் அரவக்குறிச்சி பள்ளப்பட்டியை சேர்ந்த 1½ வயது குழந்தை உள்பட அதே பகுதியை சேர்ந்த 5 பேருக்கும், தேவர்மலையை சேர்ந்த ஒருவருக்கும் என மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 6 பேரையும் சேர்த்து, கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 88-ஆக உயர்ந்துள்ளது.
கரூர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 42 பேர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். தொடர்ந்து, மராட்டியம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என மீண்டும் படிப்படியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 40 பேர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் ஒவ்வொருவராக மொத்தம் 38 பேர் குணமடைந்தனர். இந்தநிலையில் அரவக்குறிச்சி பள்ளப்பட்டியை சேர்ந்த 1½ வயது குழந்தை உள்பட அதே பகுதியை சேர்ந்த 5 பேருக்கும், தேவர்மலையை சேர்ந்த ஒருவருக்கும் என மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 6 பேரையும் சேர்த்து, கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 88-ஆக உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X