search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்ஜினீயரிங் மாணவர் உதயகுமார் வடிவமைத்த மின்வலை பொறி
    X
    என்ஜினீயரிங் மாணவர் உதயகுமார் வடிவமைத்த மின்வலை பொறி

    வெட்டுக்கிளிகளை அழிக்க என்ஜினீயரிங் மாணவர் வடிவமைத்த மின்வலை பொறி

    சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர், குறைந்த செலவில் வெட்டுக்கிளிகளை கவர்ந்து அழிக்கும் மின் வலை பொறி கருவியை தயாரித்துள்ளார்.
    ஆட்டையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டியில் வசித்து வரும் சுரேஷ்குமார், டிரைவர். இவரது மனைவி ரேவதி. இவர்களது மகன் உதயகுமார் (வயது 19).

    திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் குறைந்த செலவில் வெட்டுக்கிளிகளை கவர்ந்து அழிக்கும் மின் வலை பொறி கருவியை தயாரித்துள்ளார்.

    தற்போது பல மாநிலங்களில் பயிர்களை தின்று அழிக்கும் வெட்டுக்கிளிகளை அழிக்க பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதால் நிலம் நாசமாகும் ஆபத்து உள்ளது. அதனால் குறைந்த செலவில் வெட்டுக்கிளிகளை அழிக்கும் பாதுகாப்பான கருவியை தயாரித்து உள்ளேன்.

    வெட்டுக்கிளிகள் குறிப்பாக வெளிச்சத்தால் கவரும் தன்மை உடையது. அதனால் சிறு குண்டு பல்பு, அதை சுற்றி வெட்டுக் ளிகள் நுழையும் அளவு இடைவெளியுடன் இரு அடுக்கு கம்பி வலை அமைத்து அதில் மின் இணைப்பு கொடுத்துள்ளேன். இதை வயல்களின் நடுவே வைத்தால் இரவு முழுவதும் வெட்டுக்கிளிகளை கவர்ந்து இழுத்து மின்சாரத்தால் தாக்கி அழித்துவிடும். இக்கருவியால் ஒரு நொடிக்கு 100 வெட்டுக்கிளிகளை அழிக்கும் ஆற்றல் உள்ளது.

    தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் பாதிப்பு இல்லை. இனி வந்தாலும் அச்சப்பட வேண்டியதில்லை. ஒரு ஏக்கர் வயலில் 4 முனைகளில் இதுபோன்ற கருவிகளை வைத்தால் 4 நாட்களில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் அழிக்கப்படும்.

    கருவியின் அடிப்பரப்பில் பிளாஸ்டிக் பேப்பர் வைத்தால் இறந்த வெட்டுக்கிளிகளை எடுத்து உரமாக பயன்படுத்தலாம். இதனை தயாரிக்க ரூ. 11 ஆயிரம் செலவாகி உள்ளது. அரசு கேட்டுக்கொண்டால் இதே போன்று நிறைய கருவிகளை செய்துதர தயாராக உள்ளேன். அரசு எனக்கு உதவி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×