என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2 கைக்குழந்தைகளுக்கு தொற்று அறிகுறி : தென்காசியில் சுகாதார பணிகள் தீவிரம்
Byமாலை மலர்1 Jun 2020 2:07 PM GMT (Updated: 1 Jun 2020 2:07 PM GMT)
தென்காசியில் 2 கைக் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்டதை தொடர்ந்து அங்கு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. மேலும் அந்த தெருவுக்கு நேற்று ‘சீல்‘ வைக்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தென்காசியை சேர்ந்த 63 வயதுடைய ஒரு பெண்ணிற்கு 4 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த பெண் வாத நோய்க்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றபோது பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வீட்டில் இருந்த 6 பேருக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் 2 வயது பெண் குழந்தைக்கும், 1½ வயது ஆண் குழந்தைக்கும் நோய்த்தொற்று அறிகுறி இருந்தது தெரியவந்தது. மற்ற 4 பேருக்கும் தொற்று இல்லை. இந்த இரண்டு குழந்தைகளும் ஏற்கனவே சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் பேரக்குழந்தைகள் ஆவார்கள்.
இந்த 2 குழந்தைகளையும் நேற்று மதியம் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இவர்கள் வசித்த தெருவுக்கு சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி அலுவலர்கள் ‘சீல்‘ வைத்தனர். அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.
மேலும் இந்த பகுதி அருகிலுள்ள கீழப்புலியூரிலும் முழுமையாக கிருமிநாசினி தெளிக் கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஹசீனா, சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில் ஆகியோர் செய்தனர். கைக்குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்டது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தென்காசியை சேர்ந்த 63 வயதுடைய ஒரு பெண்ணிற்கு 4 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த பெண் வாத நோய்க்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றபோது பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வீட்டில் இருந்த 6 பேருக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் 2 வயது பெண் குழந்தைக்கும், 1½ வயது ஆண் குழந்தைக்கும் நோய்த்தொற்று அறிகுறி இருந்தது தெரியவந்தது. மற்ற 4 பேருக்கும் தொற்று இல்லை. இந்த இரண்டு குழந்தைகளும் ஏற்கனவே சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் பேரக்குழந்தைகள் ஆவார்கள்.
இந்த 2 குழந்தைகளையும் நேற்று மதியம் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இவர்கள் வசித்த தெருவுக்கு சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி அலுவலர்கள் ‘சீல்‘ வைத்தனர். அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.
மேலும் இந்த பகுதி அருகிலுள்ள கீழப்புலியூரிலும் முழுமையாக கிருமிநாசினி தெளிக் கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஹசீனா, சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில் ஆகியோர் செய்தனர். கைக்குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்டது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X