search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    திருவாரூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 11 ஆக குறைந்தது

    திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 11 ஆக குறைந்துள்ளது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்க அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இதுவரை 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 33 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.

    இந்த நிலையில் நேற்று மேலும் 2 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 11 ஆக குறைந்துள்ளது.
    Next Story
    ×