என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகளுக்கு தரமான விதை கிடைக்க நடவடிக்கை - அதிகாரி தகவல்
Byமாலை மலர்31 May 2020 4:58 PM GMT (Updated: 31 May 2020 4:58 PM GMT)
விவசாயிகளுக்கு தரமான விதை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தஞ்சை மண்டல விதை ஆய்வு பரிசோதனை அதிகாரி சிவவீரபாண்டியன் கூறினார்.
திருவாரூர்:
விவசாயிகளுக்கு தரமான விதை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தஞ்சை மண்டல விதை ஆய்வு பரிசோதனை அதிகாரி சிவவீரபாண்டியன் கூறினார்.
திருவாரூர் விதை பரிசோதனை நிலையத்தை தஞ்சை மண்டல விதை ஆய்வு பரிசோதனை அதிகாரி சிவவீரபாண்டியன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளுடன் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பணி செய்வதை பார்வையிட்டார். விவசாயிகள், விதைச்சான்று துறை மற்றும் விதை ஆய்வு துறைகள் மூலம் பெறப்படும் விதை மாதிரிகள், பிற ரக கலப்பு சோதனை, விதைகளின் ஈரப்பதம் மற்றும் முளைப்பு திறன் குறித்து ஆய்வு பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
மேலும் விதை முளைப்புத்திறன் அறையில் கடைபிடிக்கப்படும் வெப்பநிலை, ஈரப்பதம், ஒளி அளவு முறை குறித்தும், முளைப்புத்திறன் சோதனை நாற்றுக்களின் வளர்ச்சி குறித்தும் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘திருவாரூர் மாவட்டத்துக்கு நடப்பு குறுவை சாகுபடி பணிகளுக்கு தேவைப்படும் குறுவை நெல் ரகங்களான ஏ.எஸ்.டி.16, கோ-51, கோ-53, டி.கே.எம்.9, எ.டி.டி.-43, எ.டி.டி.(ஆர்) 45, எ.டி.டி-36, எ.டி.டி.-37 ஆகியவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் விதை பரிசோதனை ஆய்வு பணிகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது திருவாரூர் மாவட்ட விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் கண்ணன், வேளாண்மை அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.
விவசாயிகளுக்கு தரமான விதை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தஞ்சை மண்டல விதை ஆய்வு பரிசோதனை அதிகாரி சிவவீரபாண்டியன் கூறினார்.
திருவாரூர் விதை பரிசோதனை நிலையத்தை தஞ்சை மண்டல விதை ஆய்வு பரிசோதனை அதிகாரி சிவவீரபாண்டியன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளுடன் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பணி செய்வதை பார்வையிட்டார். விவசாயிகள், விதைச்சான்று துறை மற்றும் விதை ஆய்வு துறைகள் மூலம் பெறப்படும் விதை மாதிரிகள், பிற ரக கலப்பு சோதனை, விதைகளின் ஈரப்பதம் மற்றும் முளைப்பு திறன் குறித்து ஆய்வு பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
மேலும் விதை முளைப்புத்திறன் அறையில் கடைபிடிக்கப்படும் வெப்பநிலை, ஈரப்பதம், ஒளி அளவு முறை குறித்தும், முளைப்புத்திறன் சோதனை நாற்றுக்களின் வளர்ச்சி குறித்தும் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘திருவாரூர் மாவட்டத்துக்கு நடப்பு குறுவை சாகுபடி பணிகளுக்கு தேவைப்படும் குறுவை நெல் ரகங்களான ஏ.எஸ்.டி.16, கோ-51, கோ-53, டி.கே.எம்.9, எ.டி.டி.-43, எ.டி.டி.(ஆர்) 45, எ.டி.டி-36, எ.டி.டி.-37 ஆகியவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் விதை பரிசோதனை ஆய்வு பணிகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது திருவாரூர் மாவட்ட விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் கண்ணன், வேளாண்மை அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X