என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிங்கம்பட்டி ஜமீன் இறுதிச் சடங்கில் பங்கேற்ற 200 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்26 May 2020 9:13 AM GMT (Updated: 26 May 2020 9:13 AM GMT)
ஊரடங்கை மீறி சிங்கம்பட்டி ஜமீன் இறுதிச் சடங்கில் பங்கேற்ற 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள சிங்கம்பட்டி ஜமீன் ராஜாவாகவும், இந்தியாவில் முடிசூட்டப்பட்ட கடைசி ராஜாவாகவும் இருந்த முருகதாஸ் தீர்த்தபதி (வயது 89). நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு நேற்று மாலை சிங்கம்பட்டி ஜமீனில் நடந்தது.
இதில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர் கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதிச் சடங்கில் தடை உத்தரவையும் மீறி நூற்றுக்கணக்கானவர்கள் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் நடந்து சென்றனர்.
இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி 200 பேர் மீது தடையை மீறி கூட்டமாக சென்றதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X