search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கும்பகோணத்தில் வியாபாரி கொலை வழக்கில் 5 பேர் கைது

    கும்பகோணத்தில் வியாபாரி கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.
    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த வலையபேட்டை மாங்குடியை சேர்ந்தவர் பன்னீர் (வயது 50). இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.

    சம்பவத்தன்று இவரது வீட்டின் முன்பு இரு தரப்பினர் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனை பன்னீர் விலக்கி விட முயன்ற போது சிலர் பன்னீரை அரிவாளால் வெட்டினர். பலத்த காயம் அடைந்த பன்னீர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த அருண், அவரது தந்தை சவுந்தர்ராஜன், தாய் ருக்மணி, உறவினர்கள் சுரேஷ், பாலாஜி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
    Next Story
    ×