search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நாசரேத் அருகே இரட்டைக்கொலையில் 7 பேர் கைது

    நாசரேத் அருகே நடந்த இரட்டைக்கொலையில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாசரேத்:

    தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உடையார்குளம் காந்திநகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பலவேசம் (வயது 60), கூலி தொழிலாளியான இவர் நாசரேத் அருகே வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து, குடும்ப செலவுக்காக ரூ.40 ஆயிரம் கடன் வாங்கினார். பின்னர் பலவேசம் கடனை திருப்பி செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும், சண்முகசுந்தரம் கூடுதல் பணம் கேட்டு பலவேசத்தை மிரட்டி வந்தாராம். மேலும், அவர் வீட்டு பத்திரத்தையும் பலவேசத்திடம் திருப்பி கொடுக்கவில்லை.

    இதுகுறித்து பலவேசம், அவருடைய மருமகன் ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரத்தை சேர்ந்த தங்கராஜ் (26) ஆகிய இருவரும் நாசரேத் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சண்முகசுந்தரத்தை கைது செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சண்முகசுந்தரத்தின் உறவினர்கள் உடையார்குளம் சென்று பலவேசத்தையும், முத்துராஜையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலவேசம், தங்கராஜ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    இந்த பயங்கர இரட்டைக்கொலை குறித்து நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிப்பதற்காக, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், சூரியன், ரகு கணேஷ் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக் கப்பட்டு உள்ளன. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கும் சென்று கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த செல்லத்துரை (49), முத்துராஜா (40), பாரதி (43), தங்கபாண்டி மகன் முத்துக்குமார் (34), சொக்கலிங்கம் மகன் ஞானசுந்தர் (34), அறியன் மகன் செந்தில் முருகன் (29), ஆசீர்வாதம் மகன் தாமஸ் (30) ஆகிய 7 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×