என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை ரெயில் நிலையத்தில் 18 ரெயில் பெட்டிகள் கொரோனா தனிமை வார்டாக மாற்றம்
Byமாலை மலர்8 April 2020 1:46 PM GMT (Updated: 8 April 2020 1:46 PM GMT)
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் 18 ரெயில் பெட்டிகள் கொரோனா தனிமை வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை:
கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. வருகிற 14- ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.
சரக்கு ரெயில்களை தவிர மற்ற ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் முக்கிய தலைநகரங்களில் ரெயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டாக மாற்றுவதற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ரெயில் பெட்டிகளில், கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில் தயார் செய்யப்படுகின்றன.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திலும், ரெயில் பெட்டிகள் கொரோனா தனிமை வார்டுகளாக மாற்றம் செய்யும் பணி கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இந்த பணி அங்குள்ள பிட்லைன் எனப்படும் பராமரிப்பு மையத்தில் நடந்து வருகிறது. இரவும், பகலுமாக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
முதல் கட்டமாக 18 ரெயில் பெட்டிகள் தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் சுகாதார வளாக வசதி, டாக்டர்கள் தங்குவதற்கான அறை, ரெயில் பெட்டியில் உள்ள இருக்கைகள் அகற்றப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளன. திரை சீலைகள் மூலம் கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். நேற்று மாலை கொரோனா தனிமை வார்டில் கொசுவலை பொருத்தப்பட்டன. வித்தியாசமான வண்ணத்தில் பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே மதுரை கோட்டத்தை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் 18 கொரோனா தனிமை வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது. ஒரு பெட்டிக்கு 32 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக ரெயில்பெட்டிகளை தயார் செய்ய வேண்டும் என உயர் அதிகாரிகள் கேட்டு கொண்டால் தயார் செய்வோம். இந்த பெட்டிகளை எப்படி பயன்படுத்த வேண்டும்? என அதிகாரிகள் தெரிவிப்பார்கள்” என்றார்.
கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. வருகிற 14- ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.
சரக்கு ரெயில்களை தவிர மற்ற ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் முக்கிய தலைநகரங்களில் ரெயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டாக மாற்றுவதற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ரெயில் பெட்டிகளில், கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில் தயார் செய்யப்படுகின்றன.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திலும், ரெயில் பெட்டிகள் கொரோனா தனிமை வார்டுகளாக மாற்றம் செய்யும் பணி கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இந்த பணி அங்குள்ள பிட்லைன் எனப்படும் பராமரிப்பு மையத்தில் நடந்து வருகிறது. இரவும், பகலுமாக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
முதல் கட்டமாக 18 ரெயில் பெட்டிகள் தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் சுகாதார வளாக வசதி, டாக்டர்கள் தங்குவதற்கான அறை, ரெயில் பெட்டியில் உள்ள இருக்கைகள் அகற்றப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளன. திரை சீலைகள் மூலம் கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். நேற்று மாலை கொரோனா தனிமை வார்டில் கொசுவலை பொருத்தப்பட்டன. வித்தியாசமான வண்ணத்தில் பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே மதுரை கோட்டத்தை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் 18 கொரோனா தனிமை வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது. ஒரு பெட்டிக்கு 32 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக ரெயில்பெட்டிகளை தயார் செய்ய வேண்டும் என உயர் அதிகாரிகள் கேட்டு கொண்டால் தயார் செய்வோம். இந்த பெட்டிகளை எப்படி பயன்படுத்த வேண்டும்? என அதிகாரிகள் தெரிவிப்பார்கள்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X