என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிலிண்டர் விநியோகிக்கும் ஊழியர்களுக்கு பாதபூஜை
Byமாலை மலர்3 April 2020 11:25 AM GMT (Updated: 3 April 2020 11:25 AM GMT)
சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு கொண்டு செல்லக்கூடிய ஊழியர்களை கடவுளாக நினைத்து அந்த கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக நிறுவனத்தின் உரிமையாளரே ஊழியர்களுக்கு பாத பூஜை செய்தார்.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் தனியார் கியாஸ் நிறுவனம் உள்ளது. இங்கிருந்து சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு கொண்டு செல்லக்கூடிய ஊழியர்களை கடவுளாக நினைத்து அந்த கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக நிறுவனத்தின் உரிமையாளரே ஊழியர்களின் பாதங்களை மஞ்சள் நீரால் கழுவி, சந்தனம், குங்குமம் இட்டு, பூ போட்டு நன்றி செலுத்தினார்.
முன்னதாக சமையல் எரிவாயு சிலிண்டருக்கும், அதை ஏற்றிச்சென்ற அனைத்து வாகனங்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளர் கூறுகையில், இந்த கடும் நெருக்கடியான சூழ்நிலையிலும் எங்கள் நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவர் வீட்டிற்கும் ஒருநாள் கூட தாமதமில்லாமல் எரிவாயு சிலிண்டர்களை டெலிவரி செய்து வருகின்ற எங்கள் ஊழியர்களும், எங்களை பொறுத்தவரை கடவுள்தான்.
அதனால்தான் அந்த கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவர்களது பாதங்களுக்கு பூஜை செய்து நாங்கள் வணங்குகின்றோம் என்றார்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் தனியார் கியாஸ் நிறுவனம் உள்ளது. இங்கிருந்து சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு கொண்டு செல்லக்கூடிய ஊழியர்களை கடவுளாக நினைத்து அந்த கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக நிறுவனத்தின் உரிமையாளரே ஊழியர்களின் பாதங்களை மஞ்சள் நீரால் கழுவி, சந்தனம், குங்குமம் இட்டு, பூ போட்டு நன்றி செலுத்தினார்.
முன்னதாக சமையல் எரிவாயு சிலிண்டருக்கும், அதை ஏற்றிச்சென்ற அனைத்து வாகனங்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளர் கூறுகையில், இந்த கடும் நெருக்கடியான சூழ்நிலையிலும் எங்கள் நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவர் வீட்டிற்கும் ஒருநாள் கூட தாமதமில்லாமல் எரிவாயு சிலிண்டர்களை டெலிவரி செய்து வருகின்ற எங்கள் ஊழியர்களும், எங்களை பொறுத்தவரை கடவுள்தான்.
அதனால்தான் அந்த கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவர்களது பாதங்களுக்கு பூஜை செய்து நாங்கள் வணங்குகின்றோம் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X