என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.14 கோடி - போக்குவரத்து துறை பணியாளர்கள்
Byமாலை மலர்3 April 2020 2:40 AM GMT (Updated: 3 April 2020 2:40 AM GMT)
முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு போக்குவரத்து துறை பணியாளர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். அவர்கள் ரூ.14 கோடி வழங்குகிறார்கள் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
கரூர்:
கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கரூரில் இருந்து டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த 36 பேர், அவர்களுடைய உறவினர்கள் 3 பேர் சேர்த்து 39 பேர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா சிறப்பு வார்டுகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பயன்படும் வகையிலான பாதுகாப்பு உடை, கரூர் மாவட்டத்தில் 2 நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது. கரூருக்கு 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட உடைகள் ஆர்டர் வழங்கப்பட்டு தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.1 கோடி தமிழக அரசின் மூலம் மாவட்ட கலெக்டருக்கு வழங்கப்பட்டுள்ளது. 5 புதிய வெண்டிலேட்டர் கருவிகள் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 7 வென்டிலேட்டர்கள் இருப்பில் உள்ளது. போக்குவரத்துத்துறை பணியாளர்களின் ஒரு நாள் ஊதியமான ரூ.14 கோடியே 10 லட்சத்து 75 ஆயிரத்து 938 முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது, அதேபோல கரூர் மாவட்டத்தில் தன்னார்வலர்கள், தொழிலதிபர்கள் அனைவரும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சுமார் ரூ.1 கோடி நிதி வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். விரைவில் அந்த நிதி முதல்- அமைச்சரிடம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கரூரில் இருந்து டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த 36 பேர், அவர்களுடைய உறவினர்கள் 3 பேர் சேர்த்து 39 பேர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா சிறப்பு வார்டுகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பயன்படும் வகையிலான பாதுகாப்பு உடை, கரூர் மாவட்டத்தில் 2 நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது. கரூருக்கு 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட உடைகள் ஆர்டர் வழங்கப்பட்டு தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.1 கோடி தமிழக அரசின் மூலம் மாவட்ட கலெக்டருக்கு வழங்கப்பட்டுள்ளது. 5 புதிய வெண்டிலேட்டர் கருவிகள் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 7 வென்டிலேட்டர்கள் இருப்பில் உள்ளது. போக்குவரத்துத்துறை பணியாளர்களின் ஒரு நாள் ஊதியமான ரூ.14 கோடியே 10 லட்சத்து 75 ஆயிரத்து 938 முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது, அதேபோல கரூர் மாவட்டத்தில் தன்னார்வலர்கள், தொழிலதிபர்கள் அனைவரும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சுமார் ரூ.1 கோடி நிதி வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். விரைவில் அந்த நிதி முதல்- அமைச்சரிடம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X