என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருத்துறைப்பூண்டி அருகே மதுபாட்டில்கள் கொள்ளை- 2 பேர் கைது
Byமாலை மலர்31 March 2020 7:30 AM GMT (Updated: 31 March 2020 7:30 AM GMT)
திருத்துறைப்பூண்டி அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளை போட்டு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைதானார்கள்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரத்தில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது இந்த மதுக்கடை மூடப்பட்டுள்ளது. இந்த மதுக்கடையின் சுவரில் துளை போடப்பட்டு இருப்பதை நேற்று அதிகாலை பொதுமக்கள் பார்த்து திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரான்சிஸ், ராஜேந்திரன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மதுக்கடை சுவரில் மர்ம நபர்கள் துளை போட்டு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் தீவிர விசாரணையில் மடப்புரம் காலனி தெருவை சேர்ந்த சேகர் மகன் அஜித்குமார் (வயது 28), திருச்செல்வம் மகன் முருகேசன் (22) ஆகியோர் உள்பட 3 பேர் மதுக்கடையின் சுவரில் துளை போட்டு மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அஜித்குமார், முருகேசன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரத்தில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது இந்த மதுக்கடை மூடப்பட்டுள்ளது. இந்த மதுக்கடையின் சுவரில் துளை போடப்பட்டு இருப்பதை நேற்று அதிகாலை பொதுமக்கள் பார்த்து திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரான்சிஸ், ராஜேந்திரன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மதுக்கடை சுவரில் மர்ம நபர்கள் துளை போட்டு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் தீவிர விசாரணையில் மடப்புரம் காலனி தெருவை சேர்ந்த சேகர் மகன் அஜித்குமார் (வயது 28), திருச்செல்வம் மகன் முருகேசன் (22) ஆகியோர் உள்பட 3 பேர் மதுக்கடையின் சுவரில் துளை போட்டு மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அஜித்குமார், முருகேசன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X