என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள்
Byமாலை மலர்13 March 2020 6:08 PM GMT (Updated: 13 March 2020 6:08 PM GMT)
பள்ளி மாணவ- மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூரில், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல்துறை, பள்ளிக்கல்வித்துறை, தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் இந்தோ அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது. போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன் தொடங்கி வைத்தார். முன்னதாக தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா முகமது உசேன் வரவேற்றார்.
மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். பாலித்தீன் ஒழிப்பு, புவி வெப்பமடைதல் என்ற தலைப்புகளில் ஓவியம், வினாடி- வினா, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலும் தனித்தனியே இரு பாலருக்கும் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் 365 பேர் பங்கேற்றனர். முதல் பரிசாக ரூ.1,500-ம், 2-வது பரிசாக ரூ.1,000-ம், 3-வது பரிசாக ரூ.750-ம், ஒவ்வொரு போட்டிக்கும் 2 பேருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்படும் என்று தேசியபசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். முடிவில் இந்தோ அறக்கட்டளை மேலாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.
பெரம்பலூரில், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல்துறை, பள்ளிக்கல்வித்துறை, தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் இந்தோ அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது. போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன் தொடங்கி வைத்தார். முன்னதாக தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா முகமது உசேன் வரவேற்றார்.
மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். பாலித்தீன் ஒழிப்பு, புவி வெப்பமடைதல் என்ற தலைப்புகளில் ஓவியம், வினாடி- வினா, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலும் தனித்தனியே இரு பாலருக்கும் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் 365 பேர் பங்கேற்றனர். முதல் பரிசாக ரூ.1,500-ம், 2-வது பரிசாக ரூ.1,000-ம், 3-வது பரிசாக ரூ.750-ம், ஒவ்வொரு போட்டிக்கும் 2 பேருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்படும் என்று தேசியபசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். முடிவில் இந்தோ அறக்கட்டளை மேலாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X