என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் மோட்டார் சைக்கிள் மோதி பேக்கரி ஊழியர் பலி
Byமாலை மலர்11 March 2020 9:57 AM GMT (Updated: 11 March 2020 9:57 AM GMT)
கோவை அருகே இன்று காலை ரோட்டை கடந்த போது மோட்டார்சைக்கிள் மோதி பேக்கரி ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.
கோவை:
கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்தவர் மோகனன்(52). இவர் கோவை ஆத்துபாலம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இன்று காலை பணியில் இருந்த மோகனன் சாப்பிடுவதற்காக அந்த பகுதியில் உள்ள ரோட்டை கடந்தார். அப்போது ஈச்சனாரியில் இருந்து வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோகனன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்தபோது வரும் வழியிலேயே அவர் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் அன்பரசு(21). இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.நேற்று மாலை இவர் சுங்கம் சிந்தாமணி பஸ்நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது ரோட்டில் ஓரத்தில் கொட்டப்பட்டிருந்த மண்திட்டில் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அன்பரசு ஆஸ்பத்திரி செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோவை போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்தவர் மோகனன்(52). இவர் கோவை ஆத்துபாலம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இன்று காலை பணியில் இருந்த மோகனன் சாப்பிடுவதற்காக அந்த பகுதியில் உள்ள ரோட்டை கடந்தார். அப்போது ஈச்சனாரியில் இருந்து வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோகனன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்தபோது வரும் வழியிலேயே அவர் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் அன்பரசு(21). இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.நேற்று மாலை இவர் சுங்கம் சிந்தாமணி பஸ்நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது ரோட்டில் ஓரத்தில் கொட்டப்பட்டிருந்த மண்திட்டில் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அன்பரசு ஆஸ்பத்திரி செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோவை போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X