என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கணவரை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி கைது
Byமாலை மலர்28 Feb 2020 3:57 PM IST (Updated: 28 Feb 2020 3:57 PM IST)
புதுவண்ணாரப்பேட்டையில் கணவரை கழுத்தை நெரித்து கொன்று உடலை தூக்கில் தொங்கவிட்ட மனைவியை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்தவர் தணிகைவேல் (வயது 46). எண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி ரேகா (40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மதுபோதையில் வீட்டுக்கு வந்த தணிகைவேல் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு குழந்தைகளை அடித்து உதைத்தார். இதனால் கணவன்-மனைவி இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில், கணவர் தணிகைவேல் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக ரேகா போலீசில் புகார் செய்தார்.
மருத்துவ பரிசோதனையில் தணிகைவேல் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், ரேகாவிடம் விசாரணை செய்தார்.
இதில் ரேகா கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரிந்தது.
இது குறித்து ரேகா கூறும்போது, “சம்பவத்தன்று குடித்து விட்டு தகராறு செய்த தணிகைவேல் குழந்தையை அடித்ததால் எனக்கு கோபம் வந்தது. ஆத்திரத்தில் அவருடைய கழுத்தை பிடித்து நெரித்தேன். இதில் அவர் இறந்து விட்டதால் உடலை தூக்கில் தொங்க விட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் கூறினேன்” என்றார்.
இதையடுத்து ரேகாவை போலீசார் கைதுசெய்தனர். அவர் ஒருவரே கணவரை கொன்றாரா? அவருக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்று விசாரணை நடந்து வருகிறது.
புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்தவர் தணிகைவேல் (வயது 46). எண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி ரேகா (40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மதுபோதையில் வீட்டுக்கு வந்த தணிகைவேல் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு குழந்தைகளை அடித்து உதைத்தார். இதனால் கணவன்-மனைவி இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில், கணவர் தணிகைவேல் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக ரேகா போலீசில் புகார் செய்தார்.
மருத்துவ பரிசோதனையில் தணிகைவேல் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், ரேகாவிடம் விசாரணை செய்தார்.
இதில் ரேகா கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரிந்தது.
இது குறித்து ரேகா கூறும்போது, “சம்பவத்தன்று குடித்து விட்டு தகராறு செய்த தணிகைவேல் குழந்தையை அடித்ததால் எனக்கு கோபம் வந்தது. ஆத்திரத்தில் அவருடைய கழுத்தை பிடித்து நெரித்தேன். இதில் அவர் இறந்து விட்டதால் உடலை தூக்கில் தொங்க விட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் கூறினேன்” என்றார்.
இதையடுத்து ரேகாவை போலீசார் கைதுசெய்தனர். அவர் ஒருவரே கணவரை கொன்றாரா? அவருக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்று விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X