search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மதுரையில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது

    மதுரையில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
    மதுரை:

    மதுரை கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் கணேஷ் (வயது 32). இவர் செல்லூர் பகுதியில் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று மாலையில் அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது மதிக்கத்தக்க 2 சிறுமிகள் கடைக்கு வந்துள்ளனர். அப்போது 2 சிறுமிகளிடமும் நைசாக பேசி கடைக்குள் சங்கர் கணேஷ் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு 2 சிறுமிகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் சங்கர் கணேசை கைது செய்தனர்.
    Next Story
    ×