என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்27 Feb 2020 5:13 PM GMT (Updated: 27 Feb 2020 5:13 PM GMT)
பெரம்பலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு (யு.எப்.பி.யு.) சார்பில் பெரம்பலூர் வெங்கடேசபுரம் பாரத் ஸ்டேட் வங்கி கிளை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பெரம்பலூர் கிளை பாரத ஸ்டேட் வங்கி தொழிலாளர்கள் சங்க தலைவர் சுஜீத் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சந்திரசேகர், மனோகர், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வங்கி ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும். வங்கி அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரம் வழங்க வேண்டும். வாராக்கடனை விரைந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக அம்சபுவனா வரவேற்றார்.
முடிவில் முரளிசந்திரன் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X