search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    கடையநல்லூர் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

    கடையநல்லூர் அருகே புளியமரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    கடையநல்லூர் அருகே உள்ள புதுக்குடி கம்மாபச்சேரியை சேர்ந்தவர் கணேசன்(வயது 41), கூலித்தொழிலாளி. இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது.

    இந்நிலையில் நேற்று வழக்கம்போல் தோட்டத்திற்கு சென்ற அவர் அங்கிருந்த புளியமரத்தில் ஏறி புளி பறித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தடுமாறி கீழே விழுந்தார். இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×