என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்27 Feb 2020 9:54 AM GMT
தேனி அருகே வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத சோகத்தில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
உத்தமபாளையம்:
தேனி அருகே மயிலாடும்பாறை சிறைப்பாறையைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 52). தென்னை விவசாயம் செய்து வந்தார். விவசாய தேவைக்காக கம்பத்தில் உள்ள தனியார் வங்கியில் ரூ.12 லட்சம் கடனாக பெற்றுள்ளார்.
இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்துக்கு சென்று விட்டதால் தென்னை மரங்கள் கருகத் தொடங்கின. இதனால் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை. இதன் காரணமாக கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வங்கி ஊழியர்கள் வீட்டை ஜப்தி செய்யப்போவதாக தர்மலிங்கத்திடம் கூறியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த தர்மலிங்கம் தோட்டத்துக்கு வந்தார். அங்கு கருகிய மரங்களை கண்டு கண்கலங்கி பின்னர் விஷம் குடித்து மயங்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தர்மலிங்கத்துக்கு லதா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.
தேனி அருகே மயிலாடும்பாறை சிறைப்பாறையைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 52). தென்னை விவசாயம் செய்து வந்தார். விவசாய தேவைக்காக கம்பத்தில் உள்ள தனியார் வங்கியில் ரூ.12 லட்சம் கடனாக பெற்றுள்ளார்.
இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்துக்கு சென்று விட்டதால் தென்னை மரங்கள் கருகத் தொடங்கின. இதனால் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை. இதன் காரணமாக கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வங்கி ஊழியர்கள் வீட்டை ஜப்தி செய்யப்போவதாக தர்மலிங்கத்திடம் கூறியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த தர்மலிங்கம் தோட்டத்துக்கு வந்தார். அங்கு கருகிய மரங்களை கண்டு கண்கலங்கி பின்னர் விஷம் குடித்து மயங்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தர்மலிங்கத்துக்கு லதா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X